புதுச்சேரி
புதுவை அரசு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் குபேர் பிறந்த நாளையொட்டி பாரதி பூங்காவில உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
- குபேர் பிறந்தநாள் இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது
- அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும் நகர தந்தை என போற்றப்படுபவருமான குபேர் பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்காவில் உள்ள குபேர் சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
இதுபோல் பிரெஞ்சிந்திய விடுதலைகால மக்கள் நல இயக்கத்தினர் அதன் தலைவர் சிவராஜ் தலைமையில் குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.