யாக சாலை பூஜைகள் நடைபெற்ற காட்சி.
6 கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்
- ரெட்டிச்சாவடி அருகே தமிழகப்பகுதியான மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தில், சித்த விநாயகர், பிரகதீஸ்வரர், திரவுபதி அம்மன், முத்தாலம்மன், பொறையாத்தம்மன், கெங்கை அம்மன், ஆஞ்ச நேயர், ஆகிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.
- விழாவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மிருத்சங் கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் முதற்கால யாக பூஜை திரவ்யாஹீதி, பூர்ணாஹூதி நடத்தி தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
ரெட்டிச்சாவடி அருகே தமிழகப்பகுதியான மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தில், சித்த விநாயகர், பிரகதீஸ்வரர், திரவுபதி அம்மன், முத்தாலம்மன், பொறையாத்தம்மன், கெங்கை அம்மன், ஆஞ்ச நேயர், ஆகிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.
இதற்கான கும்பாபிஷேக விழா 8 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மிருத்சங் கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் முதற்கால யாக பூஜை திரவ்யாஹீதி, பூர்ணாஹூதி நடத்தி தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.
8.30 மணி முதல் 11. 30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 2-ம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 3-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, த்ரவ்யாஹீதி, பூர்ணாஹூதி,
தீபாராதனை நடைபெறுகிறது.
8.00 மணிக்கு சித்த விநாயகர், பிரகதீஸ்வரர், திரவுபதி அம்மன், முத்தாலம்மன், பொறையாத்தம்மன், கெங்கை அம்மன், ஆஞ்சநேயர் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம், நடைபெறுகிறது.
7 மணி அளவில் சுவாமி திருவீதிஉலா காட்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.