புதுச்சேரி

தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற நடுவர்களை புதுவை தேக்வோண்டோ சங்க தலைவர் ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கிய காட்சி.

புதுவை நடுவர்களுக்கு பாராட்டு

Published On 2023-01-01 04:43 GMT   |   Update On 2023-01-01 04:43 GMT
  • தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.
  • பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி:

தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.

சர்வதேச தேக்வோண்டோ நடுவர் முகமது ஆஷிக் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி பட்டறையில் புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தை சேர்ந்தவர் சர்வதேச நடுவர் பரத்சிங், தேசிய நடுவர்களான பாலசுப்பிரமணியன், பஞ்சுநாதன், நந்தகுமார், சார்லஸ், கீர்தன், அரவிந்த் செல்வன், ஜெயசூர்யா, மதன் மற்றும் தஷ்னபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tags:    

Similar News