புதுச்சேரி

அறப்பணி அவ்வை தோட்டத்தில் கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய காட்சி.

அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-07-02 12:07 IST   |   Update On 2022-07-02 12:07:00 IST
  • உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் முன்பு இருந்த பழைய மண்டபத்தை புதுப்பித்து தரவேண்டும்.
  • அந்த ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக மண்டபத்தை கட்டிதரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் முன்பு இருந்த பழைய மண்டபத்தை புதுப்பித்து தரவேண்டும்.

அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்துள்ளார்கள். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக மண்டபத்தை கட்டிதரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், வருவாய் அதிகாரி சாம்பவசிவம், உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகம், நகராட்சி ஆய்வாளர் ரவி மற்றும் நகராட்சி அதிகாரி களுடன் கென்னடி எம்.எல்.ஏ. அறப்பணி அவ்வை தோட்டத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு செயல்பாட்டில் இல்லாத நகராட்சி பழைய கழிப்பிடத்தை அகற்றி இலவச மனைப்பட்டா வழங்குவதற்கும் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆலோ சனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News