புதுச்சேரி

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் காட்சி.

காமராஜர் பிறந்தநாளையொட்டி பேச்சு-கட்டுரை போட்டி

Published On 2022-07-17 06:30 GMT   |   Update On 2022-07-17 06:30 GMT
  • நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
  • விழாவில் விரிவுரையாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் விரிவுரையாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியை சாமுண்டீஸ்வரி சிறப்புரை ஆற்றினார். தமிழாசிரியர் பாலச்சந்தர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை என் .எஸ் .எஸ் திட்ட அலுவலர் விரிவுரையாளர் முத்துக்குமார், ஓவிய ஆசிரியர் ராஜாக்கண்ணு உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ், சித்தானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர். 

Tags:    

Similar News