புதுச்சேரி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்த காட்சி.

வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-12-21 04:28 GMT   |   Update On 2022-12-21 04:28 GMT
  • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜி, சென்னை ராம்கோ சிமெ ண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
  • ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி சிவகுமார், நிறுவனத்தில் வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை கூறினார்.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜி, சென்னை ராம்கோ சிமெ ண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செய லாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி சிவகுமார், நிறுவனத்தில் வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை கூறினார்.

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுகளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதுவை பல்கலைக்கழகம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மற்றும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், கல்லூரி மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன், பேராசிரியர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News