புதுச்சேரி
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தொழில்பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- புதுவை லாஸ்பேட்டையில் 164 ஆண்டு பழமையான வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்பயிற்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது
- இந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் பள்ளியை மூட அரசு முடிவு செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டையில் 164 ஆண்டு பழமையான வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்பயிற்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் பள்ளியை மூட அரசு முடிவு செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த பள்ளியை திறந்து தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும் என மாணவர் கூட்டமைப்பினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில் பயிற்சி பள்ளி முன்பு மாணவர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளியில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். பள்ளியை தொடர்ந்து செயல்பட வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.