புதுச்சேரி

நாட்டு நலம் பணி திட்ட தொடக்க விழா நடைபெற்ற காட்சி.

null

நாட்டு நலப் பணி திட்ட தொடக்க விழா

Published On 2022-10-31 09:48 IST   |   Update On 2022-10-31 15:02:00 IST
  • லாஸ்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
  • மாநில நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளிகளுக்கான நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தார்கள்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாணவர் கிருஷ்ணன் ஷர்மா வரவேற்பு உரையாற்றினார். பள்ளி முதல்வர் கீதா முன்னிலை வகித்தார். மாநில நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளிகளுக்கான நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் முகாமை ெதாடங்கி வைத்தார்கள்.

2-ம் நாள் முகாமில் இயற்கை பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி சத்யசாய் பவுண்டேஷன் சார்பில் பயிற்சியாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் பயிற்சியாளர் ராஜ்கமல் ஆகியோர் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அருண் நாகலிங்கம் செய்து இருந்தார்.

Tags:    

Similar News