புதுச்சேரி

எரியாத ஹைமாஸ் விளக்கு.

ஹைமாஸ் விளக்கு 3 மாதங்களாக செயல்படவில்லை

Published On 2022-07-03 04:26 GMT   |   Update On 2022-07-03 04:26 GMT
  • பாகூர் கொம்யூன், மூ.புதுக்குப்பம் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் உயர் மின் ஹைமாஸ் விளக்கு அமைந்துள்ளது. இந்த விளக்கு சுமார் 3 மாதங்களாக எரியாமல் உள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை சரி செய்யாமல் உள்ளனர்.
  • இந்த விளக்கிற்கு கீழே மாணவர்கள் இரவு நேரத்தில் வாலிபால் விளையாடுவார்கள். மேலும் புதியதாக படவேட்டம்மன் கோவில் கட்டுமான வேலை நடைெபறுகிறது.

புதுச்சேரி:

பாகூர் கொம்யூன், மூ.புதுக்குப்பம் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் உயர் மின் ஹைமாஸ் விளக்கு அமைந்துள்ளது. இந்த விளக்கு சுமார் 3 மாதங்களாக எரியாமல் உள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை சரி செய்யாமல் உள்ளனர்.

இந்த விளக்கிற்கு கீழே மாணவர்கள் இரவு நேரத்தில் வாலிபால் விளையாடுவார்கள். மேலும் புதியதாக படவேட்டம்மன் கோவில் கட்டுமான வேலை நடைெபறுகிறது. ரேஷன் கடை, மீனவர் கூட்டுறவு சங்க கட்டிடம், நூலகம், கலையரங்கம், பஸ் நிறுத்தம், அரசு பள்ளி இவை அனைத்திற்கும் வேளிச்சம் கிடைத்த நிலையில் 3 மாதங்களாக இருள் சூழ்ந்துள்ளது. விரைந்து ஹைமாஸ் விளக்கினை சரி செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News