புதுச்சேரி

புதுவையில் கனமழை: பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை

Published On 2022-11-11 09:21 IST   |   Update On 2022-11-11 09:21:00 IST
  • புதுவையில் நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று அதிகாலை கனமழை பெய்தது.
  • கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி புதுவையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். மழையால் சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டது. நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று அதிகாலை கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News