புதுச்சேரி

கோவில் மண்டப விரிவாக்க பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

மண்டப விரிவாக்க பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-12-05 08:48 IST   |   Update On 2022-12-05 08:48:00 IST
  • உப்பளம், நேத்தாஜி நகர் 3-ல் பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது.
  • கோவில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை கோபுர விமானம் கருங்கற்களால் அமைத்தல் மற்றும் கோவில் மண்டப விரிவாக்க பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

உப்பளம், நேத்தாஜி நகர் 3-ல் பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கோபுர விமானம் அமைத்தல் மண்டப விரிவாக்க பணிகள் மயிலம் பொம்மபுர ஆதீனம் நல்ஆசியுடன் திருப்பணி ஆரம்ப விழா நடைபெற்றது.

கோவில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை கோபுர விமானம் கருங்கற்களால் அமைத்தல் மற்றும் கோவில் மண்டப விரிவாக்க பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இதில் தி.மு.க. ஆதிதிராவிட துணை அமைப்பாளர் தங்கவேலு, கிளைச் செயலாளர் மனோஜ், ராகேஷ் கவுதமன், லாரன்ஸ், ரகுமான், மற்றும் உபயதாரர்கள்,  கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News