புதுச்சேரி

கோப்பு படம்.

கல்வித்துறை அதிகாரிகளுடன் பட்டதாரி ஆசிரியர்கள் வாக்குவாதம்

Published On 2023-07-31 08:45 GMT   |   Update On 2023-07-31 08:45 GMT
  • பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுவை கல்வித்துறையில் சமூக அறிவியல் பாடத்திற்கான பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கலந்தாய்வை பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். கல்வித்துறை அலுவலகத்தில் திரண்ட அவர்கள், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணியிடங்கள் குறைப்பு மறைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும், சீனியாரிட்டி அடிப்படை யான கலந்தாய்வினை நடத்த வலியுறுத்தியும் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல காரைக்காலில் உள்ள ஆசிரியர்களும் கலந்தாய்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News