புதுச்சேரி

மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய காட்சி.

பள்ளி மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-10-05 09:54 GMT   |   Update On 2022-10-05 09:54 GMT
  • புதுவை பிராணிகள் நல பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 4-ந் தேதி உலக விலங்குகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை பிராணிகள் நல பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 4-ந் தேதி உலக விலங்குகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

விலங்குகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருமாம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய போட்டி நடந்தது. பிராணிகள் நல சங்க தலைவர் டாக்டர் செல்லமுத்து தலைமை தாங்கினார்.

லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் முகமது சுபையா, தேவதர்ஷினி, மகேஸ்வரி, கீர்த்திகா, புவனேஸ்வரி ம‌ற்று‌ம் பள்ளியின் ஆசிரியர்கள செய்திருந்தனர். பள்ளி துணை முதல்வர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News