புதுச்சேரி

கோப்பு படம்.

சூதாடிய கும்பல் கைது

Published On 2022-12-15 15:14 IST   |   Update On 2022-12-15 15:14:00 IST
  • திருபுவனை அருகே காசுவைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
  • அப்போது அங்கு காசுவைத்து சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

புதுச்சேரி:

திருபுவனை அருகே காசுவைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை அருகே மதகடிப்பட்டு புதுநகர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு காசுவைத்து சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கலித்தீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த ஆனந்தன்( 45) ராஜி (32) வீரமணி (40) ஜெயமணி (35) ஆறுமுகம் (30) மற்றும் கரையாம்புத்தூரை சேர்ந்த அய்யப்பன் (44) தமிழக பகுதியான மாத்தூரை சேர்ந்த பாஸ்கர் (47) என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப்பணம் 31 ஆயிரத்து 800 மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News