புதுச்சேரி

ஆதிதிராவிடர் கூட்டமைப்பு சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிய காட்சி.

மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

Published On 2022-07-23 14:21 IST   |   Update On 2022-07-23 14:21:00 IST
  • நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ரோகு. அருள்தாஸ் தலைமை தாங்கி நோட்டு புத்தகங்களை வழங்கினார்
  • நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் கலைமணி முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை உலக கல்வி தின விழாவாகவும், காமராஜர் பிறந்த நாளை விழாவை முன்னிட்டு அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ரோகு. அருள்தாஸ் தலைமை தாங்கி நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் கலைமணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலைமன்னன், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி நூலக ஆசிரியர் கலைவாணன், பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு எழுது பொருட்களை வழங்கினர். கவுரவ தலைவர் திருமால், நகரத் தலைவர் ஆதிகேசவன், அமைப்பு செயலாளர் பொன்னிவேல், கொள்கை பரப்பு செயலர் பரமசிவம், மாநில செயலாளர்கள் பாவேந்தன், கண்ணன், செய்தி தொடர்பாளர் கன்னியப்பன் மாணவர் கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News