புதுச்சேரி

ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச கண் கண்ணாடி

Published On 2022-06-22 14:47 IST   |   Update On 2022-06-22 14:47:00 IST
  • உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் 200 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச கண் கண்ணாடி சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையத்தில் நடந்தது.

புதுச்சேரி:

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் பிறந்தநாளையொட்டி உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆட்டோ, டெம்போ மற்றும் பேருந்து டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையத்தில் நடந்தது.

முகாமுக்கு தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார். முகாமை சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா தொடங்கி வைத்து, 200 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், துணை அமைப்பாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், கதிர்காமம் தொகுதி பொறுப்பாளர் வடிவேலு, தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் பொன்னுசாமி, மாநில பிரதிநிதி குரு, வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், தொ.மு.ச. தலைவர் அண்ணா அடைக்கலம்,

மாணவர் அணி துணை அமைப்பாளர் ரெமி எட்வின், தொண்டர் அணி மதனா, ராஜேஷ், ஆட்டோ சங்கம் முரளி, மிஷேல், கிளை செயலாளர்கள் சசி, அகிலன், முத்து, தட்சணா, உதயகுமார், வெங்கட், ஐசக், கிரி, நெல்சன், பலராமன், இளைஞர் அணி தாமரை, அன்பழகன், ஸ்ரீதர், மூர்த்தி, முத்தமிழ் நகர் இளங்கோ, கோபி, ஆட்டோ பாரதி, அஜிபாஷா, சேட்டு என்ற வேல்முருகன், பெரோஸ், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News