புதுச்சேரி

கட்டணமில்லா ஆட்டோ சேவையை கவர்னர் தமிழிசை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு கட்டணமில்லா ஆட்டோசெல்போன் நம்பரில் அழைத்தால் வீடு தேடி வரும்

Published On 2023-04-30 08:23 GMT   |   Update On 2023-04-30 08:23 GMT
  • கவர்னர் தமிழிசை ஆட்டோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • கட்டணத்தை ஆட்டோ டிரைவர்களுக்கு தொண்டு நிறுவனம் வழங்கும்.

புதுச்சேரி:

புதுவை கேரிங் ஆர்ம்ஸ் தொண்டு நிறுவனம் அறக்கட்டளை கர்ப்பிணி பெண்களுக்கான கட்டண மில்லா ஆட்டோ சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கவர்னர் தொடங்கி வைத்தார் இதன் தொடக்க விழா கவர்னர் மாளிகை எதிரே நடந்தது. கவர்னர் தமிழிசை ஆட்டோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தொண்டு நிறுவன மேலாண் இயக்குனர் எரிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் உள்ள கர்ப்பிணி பெண்கள் 83448 68788 என்ற செல்போன் நம்பரை தொடர்பு கொண்டால் ஆட்டோ வீடு தேடி வரும். கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம். கட்டணத்தை ஆட்டோ டிரைவர்களுக்கு தொண்டு நிறுவனம் வழங்கும்.

Tags:    

Similar News