புதுச்சேரி

கோப்பு படம்.

ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி

Published On 2022-11-10 10:44 IST   |   Update On 2022-11-10 10:44:00 IST
  • புதுவை முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஆதிமூலம் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் வீட்டின் கீழ் தளத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
  • ஆனால் அந்த பணத்தை தரவில்லை. திடீரென அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஆதிமூலம் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி.

இவர் வீட்டின் கீழ் தளத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் அப்பகுதியில் உள்ள பலர் சீட்டு கட்டி வந்துள்ளனர். அழகர்சாமி தனது மனைவி செந்தமிழ் செல்வியுடன் இணைந்து ரூ.50 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் என பல சீட்டுகளை நடத்தி வந்துள்ளார்.இதில் சீட்டு கட்டி ஏலம் எடுத்தவர்களுக்கு கடைசியாக பணம் தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் அந்த பணத்தை தரவில்லை. திடீரென அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி யடைந்த சீட்டு கட்டியவர்கள் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்துள்ளனர். பலகோடி ரூபாய் அவர்கள் ஏமாற்றியதாக தெரிகிறது. இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தம்பதியை தேடிவருகிறார்.

Tags:    

Similar News