மீன்பிடி தடைகால நிவாரணம் நாளை மறுநாள் வங்கி கணக்கில் சேர்ப்பு
- புதுவை அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
- ரூ.63 லட்சத்து 52 ஆயிரத்து 50 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்கால நிவாரணமானது நடப்பு(2022) ஆண்டிற்கு 2-ம் கட்டமாக 1,155 மீனவ குடும்பங்களுக்கு ரூ.63 லட்சத்து 52 ஆயிரத்து 50 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி நிவாரண தொகையானது புதுவை பகுதியைச் சேர்ந்த 919 குடும்பங்களுக்கும், காரைக்கால் பகுதியை சேர்ந்த 73 குடும்பங்களுக்கும், மாகி பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கும், மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 143 குடும்பங்களுக்கும் முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.