- தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். மீனவர். இவரது மகன் சுரேந்தர் (வயது23). அங்குள்ள கடற்கரை பகுதியில் வளை பின்னும் கட்டிடம் அருகில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன் தன்னை பற்றித்தான் சுரேந்தர் பேசுவதாக கருதி அவரிடம் தகராறு செய்தார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். மீனவர். இவரது மகன் சுரேந்தர் (வயது23). அங்குள்ள கடற்கரை பகுதியில் வளை பின்னும் கட்டிடம் அருகில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன் தன்னை பற்றித்தான் சுரேந்தர் பேசுவதாக கருதி அவரிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
அப்போது ஆத்திரமடைந்த பிரவீன் தகாத வார்த்தைகளால் திட்டி சுரேந்தரை கையால் தாக்கினார். இதையடுத்து சுரேந்தர் இதுபற்றி போலீசில் புகார் செய்யப்போவதாக தெரிவித்த போது உன்னை இங்கிருந்து உயிரோடு விட்டால்தானே போலீசில் புகார் செய்வாய் என கூறியப்படியே பிரவீன் அங்கிருந்த தடியை எடுத்து சுரேந்தரை தாக்கினார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சுரேந்தரை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சுரேந்தரின் தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.