புதுச்சேரி

தென்பெண்ணையாற்றில் சுத்தம் செய்து வரும் விவசாயிகளை படத்தில் காணலாம்.

மஞ்சுவிரட்டுக்கு மாடுகளை தயார் செய்யும் விவசாயிகள்

Published On 2023-01-16 13:51 IST   |   Update On 2023-01-16 13:51:00 IST
  • பாகூர் பகுதியில் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகளில் வளர்க்கும் கறவை மாடுகள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் காளை மாடுகளை தென்பெண்ணை ஆறு ஏரி குளங்களில் கழுவி வருகின்றனர்.
  • இதே போல நடைபெறும். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு விவசாயத்தி ற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர், லாரி மற்றும் கார் இருசக்கர வாகனங்களையும் அலங்கரித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

பாகூர் பகுதியில் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகளில் வளர்க்கும் கறவை மாடுகள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் காளை மாடுகளை தென்பெண்ணை ஆறு ஏரி குளங்களில் கழுவி வருகின்றனர்.

பின்னர் மாட்டின் கொம்பில் வண்ணம் பூசி, மலர், மா, பனை ஓலையால் தோர அலங்காரம் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல நடைபெறும். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு விவசாயத்தி ற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர், லாரி மற்றும் கார் இருசக்கர வாகனங்களையும் அலங்கரித்து வருகின்றனர்.

அனைத்து கிராமத்திலும் மாடுகளை கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்து மஞ்சுவிரட்டு விமர்சையாக நடத்துவர் அதே போல இளைஞர்கள் தங்களது வாகனங்களில் ஏறிக்கொண்டு ஊர்வலமாக கிராமத்தை சுற்றி வருவர்.

Tags:    

Similar News