புதுச்சேரி
மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயல் விளக்கம்
- எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- செயல் விளக்கத்தை இந்திரா இண்டேன் பரசுராமன் விளக்கிக் கூறினார்.
புதுச்சேரி:
இந்திரா இண்டேன் கியாஸ் நிறுவனம் சார்பில் தொண்டமான் நத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமையல் எரிவாயு குறித்து எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
செயல் விளக்கத்தை இந்திரா இண்டேன் பரசுராமன் விளக்கிக் கூறினார். இதில் பள்ளியின் முதல்வர் சண்முகம், சொர்ணாம்பிகா, அன்பரசி, செல்வலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பாளர் உத்திரேஸ்வரன் மற்றும் மகளிர் சுயநிதி குழு அமைப்பாளர் சந்திர வசந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.