புதுச்சேரி

முகாமில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பேசிய போது எடுத்தபடம். அருகில் வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளார்.

null

மத்திய அரசின் முயற்சி பாராட்டத்தக்கது பா.ஜனதா மகளிர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பேச்சு

Published On 2022-06-08 09:39 IST   |   Update On 2022-06-08 09:58:00 IST
  • பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் மத்திய அரசின் முயற்சி பாராட்டத்தக்கது என்று பா.ஜனதா மகளிர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பேசியுள்ளார்
  • பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஹோட்டல் கிரீன் பேலசில் நடந்தது.

புதுச்சேரி:

புதுவை பா.ஜனதா மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் மின் வியாபார தளம் குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஹோட்டல் கிரீன் பேலசில் நடந்தது.

மகளிர் அணி மாநிலத் தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சாமி நாதன், மகளிர் அணியின் மாநில பொறுப்பாளர் ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர். மகளிர் அணியின் தேசிய செயலாளரும், ஜெம் போர்ட்டலின் தேசிய பொறுப்பாளருமான உஷா பாஜ்பாய், மின் வியாபார தளத்தை பதிவு செய்வது, அதன் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தார்.

பின்னர் அவர் பேசும் போது, திருநங்கைகள் வியாபாரம் செய்ய ஊக்குவிக்கவும், பெண்க ளின் பொருளாதாரத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தவும் மத்திய அரசு மேற் கொண்டு வரும் முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.

இதில் கைவினை பொருள் விற்கும் பெண்கள், சலவை தொழில் செய்யும் பெண்கள், தொண்டு நிறுவனப் பெண்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

மகளிர் அணி தேசிய உறுப்பினர் தாமரைச் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News