புதுச்சேரி
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்-கென்னடி எம்.எல்.ஏ. மனு
- புதுவை அரசு பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட பிரிவு அலுவலகத்தில் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கோரிக்கை மனு அளித்தார்.
- திப்புராயப்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை அரசு பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட பிரிவு அலுவலகத்தில் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கோரிக்கை மனு அளித்தார். அதில், உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட
நேதாஜி நகர்-2, அழகர்சாமி வீதியில் பல மாதங்களாக தண்ணீர் அழுத்தம் குறை வாக உள்ளது. திப்புராயப்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். தாமரை நகரில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தடைப்பட்டுள்ளது. இதனை விரைவுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.