புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ.தூர்வாரும் பணியை ஆய்வு செய்த காட்சி.

தூர்வாரும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-11-28 09:15 GMT   |   Update On 2022-11-28 09:15 GMT
  • உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளி பாதாள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழிந்து வந்தது.
  • இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பணிகளை தூரிப்படுத்தினார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளி பாதாள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழிந்து வந்தது.

இதையடுத்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், அப்பகுதியில் ஆய்வு செய்து, ஆண்டுக்கு 2 முறை முழுமையாக நவீன எந்திரம் மூலம் தூர்வார வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அதன்படி வம்பா–கீரப் பாளையம் திப்புராய பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பாதாள வடிகால்களை நவீன எந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பணிகளை தூரிப்படுத்தினார். இதில் ெதாகுதி செயலாளர் சக்திவேல் அவைத் தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல் உடனிருந்தனர்.

Tags:    

Similar News