புதுச்சேரி
- புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில சைக்கிள் போலோ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் ஜீவானந்தம் பள்ளியில் நடந்தது.
போட்டியில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை ரிச்சர்ட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கேடயம், சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை சைக்கிள் போலோ சங்க தலைவர் சத்தியராஜ், சங்க நிறுவனர் பாஸ்கரன், செயலாளர்கள் ஸ்டாலின், ஜெயராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.