புதுச்சேரி

கோப்பு படம்.

கூரியர் நிறுவன உரிமையாளர் தூக்குப் போட்டு தற்கொலை

Published On 2022-11-26 06:13 GMT   |   Update On 2022-11-26 06:13 GMT
  • கடன் தொல்லையால் கூரியர் நிறுவன உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அருள்ராஜ் மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

புதுச்சேரி:

கடன் தொல்லையால் கூரியர் நிறுவன உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுவை நையினார்மண்டபம் சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது27). இவர் சொந்தமாக கூரியர் நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு ஜாய்ஸ்மேரி என்ற மனைவி உள்ளார்.

தொழில் சம்பந்தமாக அருள்ராஜ் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் நஷ்டம் காரணமாக அருள்ராஜ் கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் திண்டாடி வந்தார்.

ஆனால் பணம் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு அருள்ராஜை தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் அருள்ராஜ் விரக்தியில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அருள்ராஜ் மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாய்ஸ்மேரி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருள்ராஜை தூக்கில் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருள்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி ஜாய்ஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News