புதுச்சேரி

கோப்பு படம்

புதுவையில் 42 பேருக்கு கொரோனா

Published On 2022-06-24 15:01 IST   |   Update On 2022-06-24 15:01:00 IST
  • புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
  • புதுவையில் ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 36, காரைக்காலில் 2, ஏனாமில் 4 என புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.

புதுவையில் ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 36, காரைக்காலில் 2, ஏனாமில் 4 என புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை, காரைக்காலில் தலா ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 151, காரைக்காலில் 9, ஏனாமில் 16, மாகியில் 4 பேர் என 180பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

புதுவையில் 23, காரைக்காலில் 2, ஏனாமில் ஒருவர், மாகியில் 2 பேர் என 28 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.

புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 34 ஆயிரத்து 252 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முககவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News