புதுவையில் 44 பேருக்கு கொரோனா தொற்று
- புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
- புதுவையில் ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
புதுவையில் ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 28, காரைக்காலில் 7, ஏனாமில் 9 பேர் என புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 3, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 185, காரைக்காலில் 24, ஏனாமில் 26, மாகியில் 7 பேர் என 242 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 30, காரைக்காலில் ஒருவர் என 31 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
மாநிலத்தில் கொரோ னாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 40 ஆயிரத்து 693 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோ னா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.