புதுச்சேரி
கோப்பு படம்.
- புதுவை இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
- இது தொடர்பான ஆதாரத்துடன் விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற வலியுறுத்தி சிந்தனை யாளர் பேரவை, புதுவை இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
ஆனால் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் முன்பே வழுதாவூர் சாலையில் தடைவேலிகளை அமைத்து போராட்ட காரர்களை தடுத்து நிறுத்தி பலரை கையையும் தோளையும் பிடித்து இழுத்து தள்ளி போலீஸ் வாகனத்தில் ஏற்றியது ஜனநாயகத்துக்கு எதிரான அராஜகமாகும். புதுவை காவல்துறை நடத்திய இத்தகைய அத்துமீறல்களை வன்மை யாக கண்டிக்கிறோம்.
இது தொடர்பான ஆதாரத்துடன் விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.