புதுச்சேரி

வியாபாரிகளுடன் கொம்யூன் ஆணையர் ஆலோசனை நடத்திய காட்சி.

கொம்யூன் ஆணையர் வியாபாரிகளுடன் ஆலோசனை

Published On 2022-07-03 04:30 GMT   |   Update On 2022-07-03 04:30 GMT
  • புதுவை அரசால் ஜூலை மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உட்பட்ட அனைத்து வியாபாரிகளையும் அழைத்து, ஆணையர் ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவை அரசால் ஜூலை மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உட்பட்ட அனைத்து வியாபாரிகளையும் அழைத்து, ஆணையர் ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மேலாளர் வீரம்மாள், இளநிலை பொறியாளர் சுரேஷ், இளநிலை எழுத்தர் செழியன், வியாபாரி சங்கத் தலைவர் ராமபத்திரன், செயலாளர் சந்துரு மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆேலாசனை கூட்டத்தில் வியாபாரிகளுக்கு துணி பை, விளம்பர பதாகை வழங்கப்பட்டது. தொடர்ந்து வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கி ஒத்துழைப்பு தருமாறும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் ஆணையாளர் ரமேஷ் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News