புதுச்சேரி

ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்ட காட்சி.

யோகா தினம் கொண்டாட்டம்

Published On 2023-06-22 08:52 GMT   |   Update On 2023-06-22 08:52 GMT
  • ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 9-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
  • வேல்முருகன் யோகா கலையில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம், மணவெளி, ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 9-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் பதஞ்சலி யோகா மையத்தின் இயக்குனர்வேல்முருகன் யோகா கலையில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். யோகா உடல், மனநலத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார் எடுத்து ரைத்தார்.

யோகா கலையை நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை பள்ளி ஆசிரியை மாலா விளக்கிக் கூறினார்.

விழா வினை ஆசிரியர்கள் பரமேஸ்வரி, ஆலிஸ், மணிமேகலை, சிவகங்கா, ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பள்ளி ஆசிரியை லீமா ரோஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News