புதுச்சேரி

உலக தாய்ப்பால் வார விழாவில் பேசிய காட்சி.

உலக தாய்ப்பால் வார விழா

Published On 2022-08-06 06:43 GMT   |   Update On 2022-08-06 06:43 GMT
  • புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் அரியாங்குப்பம் வட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா அரியாங்குப்பத்தில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
  • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் அரியாங்குப்பம் வட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா அரியாங்குப்பத்தில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி முன்னிலை வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி கிளாரா, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாக்கியவதி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் சத்துணவுகள் குறித்த உணவு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News