புதுச்சேரி

கோப்பு படம்.

துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு செய்ய சட்ட நிபுணர்களுடன் சி.பி.ஐ. ஆலோசனை

Published On 2023-08-12 14:05 IST   |   Update On 2023-08-12 14:05:00 IST
  • புதிய திருத்தத்தின்படி புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்ப ட்டுள்ளது.
  • நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தாக்கல் செய்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு மைய பொறுப்பு இயக்கு னராக 2008-16-ம் ஆண்டு பேராசிரியர் ஹரிகரன் பணிபுரிந்தார்.

இவர் பேராசிரியர், பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தது தொடர்பாக போலி ரசீது மூலம் கணக்கு காட்டி ரூ.2.25 கோடி மோசடி செய்தார். இவரை காப்பாற்ற துணைவேந்தர் குர்மீத்சிங் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் 2 புகார்கள் அளிக்கப்பட்டது. புதுவை மாநில ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ஆனந்த் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ. தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் சீனிவாசன் ஆஜரானார். அப்போது ஊழல் தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின்படி புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்ப ட்டுள்ளது.

பல்கலைக்கழகம் சார்பிலும் பேராசிரியர் மீதான புகார் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, ஊழல் புகாரில் சிக்கியவ ர்களை காப்பாற்ற முயற்சி ப்பதை ஏற்க முடியாது. துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு ப்பதிந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.

இதையடுத்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்தது. பல்கலைக்கழக நிதி பொறுப்பு அதிகாரி லாசர் தணிக்கை அறிக்கை சமர்பித்துள்ளார். அதில் ஹரிகரன் ரூ.27 லட்சம் போலி ரசீது தாக்கல் செய்து ள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது ஹரிகரன் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தாக்கல் செய்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் துணைவேந்தரை சேர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News