புதுச்சேரி

கோப்பு படம்.

சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும்

Published On 2023-05-25 13:32 IST   |   Update On 2023-05-25 13:32:00 IST
  • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
  • எரிசாராயம் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பூர்வாங்க விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில இந்தியகம்யூனிட்டு செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-

 மத்திய அரசு கூடுதல் நிதி அளித்திருப்பதாக பா.ஜனதாவினர் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

10-ம் வகுப்பு தேர்வில் ஏற்கனவே மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை புதுவை பள்ளிகளில் கொண்டுவருவது பா.ஜகவின் அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றும்.

வழிமுறை ஆசிரியர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு தயாராகாத நிலையில் அதை அமல்படுத்தினால் புதுவை மாணவர்களின் நிலைமை மேலும் கேள்விக்குறியாகும்.

தமிழகத்தில் எரிசாராயம் குடித்து பலர் இறந்ததற்கு புதுவைதான் காரணம் என கூறப்படுகிறது. எரிசாராயம் கடத்தலின் ஊற்றுக் கண்ணாக புதுவை திகழ்கிறது. எரிசாராயம் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பூர்வாங்க விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News