புதுச்சேரி

பேரணியை இன்ஸ்பெக்டர் சாந்தி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொதுமேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-10-17 10:12 IST   |   Update On 2022-10-17 10:12:00 IST
  • வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உட்பட்ட இந்திராணி செவிலியர் கல்லூரி சார்பில் உலக பெண்கள் மார்பக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி புதுவை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் வடமங்கலம் வரை சென்று, மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

புதுச்சேரி:

அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உட்பட்ட இந்திராணி செவிலியர் கல்லூரி சார்பில் உலக பெண்கள் மார்பக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மல்லிகா கண்ணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பொதுமேலாளர் சவுந்தரராஜன், வில்லியனூர் அனை த்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, அரியூர் சுகாதார மைய டாக்டர் பிரேமா, பெண் போலீஸ் அமுதா ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், துணை பே ராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி புதுவை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் வடமங்கலம் வரை சென்று, மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ெபாதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News