புதுச்சேரி

எம்.ஐ.டி.கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.

எம்.ஐ.டி.கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-01-22 09:38 IST   |   Update On 2023-01-22 09:38:00 IST
  • புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), சென்னை ஓப்போ - ப்ரோ மொபைல் டிரேடிங் நிறுவனம் சார்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
  • ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), சென்னை ஓப்போ - ப்ரோ மொபைல் டிரேடிங் நிறுவனம் சார்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.

இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் ஹரிஷ், மனிதவள துறை நிர்வாகி காயத்ரி மற்றும் குழுவினர், அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மயிலம் பொறியியல் கல்லூரி மற்றும் கிறிஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் இருந்து மேலாண்மை துறை இறுதி ஆண்டு மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர் வைத்தீஸ்வரன் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News