புதுச்சேரி
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் போராட்டம்
- அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுவை மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
- ரங்கப்பிள்ளை வீதி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தின் புதுவை மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
ரங்கப்பிள்ளை வீதி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜசேகர் தொடக்கவுரையாற்றினார். புதுவை ஓய்வூதியர்கள் சங்க மாநில செயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் முத்து, சுப்பிரமணியன், குமார், வில்லியனூர் கிளை செயலாளர் கலியபெருமாள், ஆகியோர்வா ழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.