புதுச்சேரி

அரசு பள்ளி சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜையில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பங்கேற்ற போது எடுத்த படம்.

ரூ.11.70 லட்சம் செலவில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை

Published On 2022-12-01 09:05 GMT   |   Update On 2022-12-01 09:05 GMT
  • ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள, அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவரானது, ஒரு பக்கத்தில் விரிசல் ஏற்பட்டு மற்றொரு பக்கம் சுவர் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், பள்ளிக்கு புதியதாக மதில் சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
  • அமைச்சரின் தீவிர முயற்சியால் புதிய மதில் சுவர் அமைக்கும் பணியானது ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

புதுச்சேரி:

ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள, அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவரானது, ஒரு பக்கத்தில் விரிசல் ஏற்பட்டு மற்றொரு பக்கம் சுவர் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், பள்ளிக்கு புதியதாக மதில் சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியரும் பொதுமக்களும், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும், குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ. சரவணன்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அமைச்சரின் தீவிர முயற்சியால் புதிய மதில் சுவர் அமைக்கும் பணியானது ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை சிறப்பு கட்டிட கோட்டம் செயற்பொ றியாளர் மாணிக்கவாசகம், கல்வித்துறை முதன்மை அதிகாரி தனச்செல்வன் நேரு, கல்வித்துறை துணை ஆய்வாளர் (வட்டம்-5) ராபர்ட் கென்னடி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கஜலட்சுமி, இளநிலை பொறியாளர் சுந்தர்ராஜு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், பள்ளி ஆசிரியர்கள், கட்டிட ஒப்பந்ததாரர் சபாஸ்டின் மார்ஷல், ஊர் பொதுமக்கள், பா.ஜனதா தொகுதி தலைவர் சாய் தியாகராஜன், கட்சி நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News