புதுச்சேரி

பகுஜன் சமாஜ் கட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற காட்சி. அருகில் மாநில ஒருங்கிணபை்பாளர் பவானி இளவேனில் உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி கலந்தாய்வு கூட்டம்

Published On 2023-01-09 14:42 IST   |   Update On 2023-01-09 14:42:00 IST
  • புதுவை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், மாநில மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் சித்தார்த், மத்திய ஒருங்கிணைப்பாளர், நித்தின் சிங் தலைமையேற்று கலந்துகொண்டனர்.
  • நிகழ்ச்சியில் 200 இளைஞர்களுடன் சீஷப்பிள்ளை கட்சியில் இணைந்தனர்.

புதுச்சேரி:

புதுவை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், மாநில மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் சித்தார்த், மத்திய ஒருங்கிணைப்பாளர், நித்தின் சிங் தலைமையேற்று கலந்துகொண்டனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின் 150 வாகனங்களில் 300 பேர்கள் யானைக்கொடியேந்தி பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளராக பாவானி இளவேனிலை தேசிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்தனர். இளைஞர்கள் அனைவரும் ஜெய் பீம் முழக்கமிட்டனர்.

அதனை தொடர்ந்து ஏற்புரை வழங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் பவானி இளவேனில் புதுவையில் பாபாசாகேப் அம்பேத்கர் கொள்கையை வெற்றியடைய செய்வதே லட்சியம் என பேசினார்.

நிகழ்ச்சியில் 200 இளைஞர்களுடன் சீஷப்பிள்ளை கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில் புதுவை மாநில தலைவர் மூர்த்தி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

பறை இசை மற்றும் கொள்கை பாடலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர்கள் கி.கோ.மதிவதணன் மற்றும் உதயகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.

Tags:    

Similar News