புதுச்சேரி

விழிப்புணர்வு நடைபயணம் போது எடுத்த காட்சி.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபயணம்

Published On 2022-09-22 10:31 IST   |   Update On 2022-09-22 10:31:00 IST
  • விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நடைபயணம் பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை சார்பில் கடற்கரை சாலையில் கார்கில் நினைவிடத்தில் இருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது.
  • மருந்தியல் துறை தலைவர் டாக்டர் இசபெல்லா, பேராசிரியர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி:

தேசிய மருந்தியல் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மருந்து பாதுகாப்பு அதனால் ஏற்படும் ஒவ்வாமை அதன் பக்கவிளைவுகள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நடைபயணம் பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை சார்பில் கடற்கரை சாலையில் கார்கில் நினைவிடத்தில் இருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது.

பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை வகித்தார்.மருந்தியல் துறை தலைவர் டாக்டர் இசபெல்லா, பேராசிரியர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை தலைவர் டாக்டர் லூர்து ஜெப்ரின்கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மருந்தியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முடிவில்டாக்டர் ஷில்பா நன்றி கூறினார்.

Tags:    

Similar News