புதுச்சேரி

பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-23 15:11 IST   |   Update On 2022-09-23 15:11:00 IST
  • ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி புதுவை சுகாதாரத்துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.
  • புதுவை சட்டப்பேரவை வாயிலிருந்து புறப்பட்ட பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி புதுவை சுகாதாரத்துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவை வாயிலிருந்து புறப்பட்ட பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சுகாதாரதுறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் துறை அதிகாரிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மற்றும் சமுதாயக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவி பங்கேற்ற பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கம்பன் கலையரங்கில் நிறைவு பெற்றது.

Tags:    

Similar News