புதுச்சேரி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-09 14:45 IST   |   Update On 2022-07-09 14:45:00 IST
  • திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கோரி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • விழிப்புணர்வு பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கோரி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பஸ் நிலையத்தில் தொடங்கிய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வானூர் சேர்மன் உஷா பி .கே.டி. முரளி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து துணிப்பையை அறிமுகப்படுத்தினார்.

இதில் தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ், மற்றும் 12 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News