புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவ கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி.

விழிப்புணர்வு பேரணி

Published On 2022-10-08 14:30 IST   |   Update On 2022-10-08 14:30:00 IST
  • ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணியாக கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கி கார்கில் நினைவிடம் வரை நடந்து சென்றனர்.

புதுச்சேரி:

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ஸ் மனநலத்துறை சார்பில் செவிலியர் கல்லூரி மாணவ- மாணவிகள் மனநலம் குறித்த விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணியாக கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கி கார்கில் நினைவிடம் வரை நடந்து சென்றனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார்.பிம்ஸ் மனநலமருத்துவ துறை தலைவர் டாக்டர் பிரதீப் திலகன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சாய்ராபானு கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலிய மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News