புதுச்சேரி

மத்திய வேளாண் அதிகாரியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சந்தித்த காட்சி.

ஆத்மா திட்டத்தை தொடர வேண்டும்-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேண்டுகோள்

Published On 2022-06-21 14:42 IST   |   Update On 2022-06-21 14:42:00 IST
  • ஆத்மா திட்டத்தை தொடர வேண்டும் என்று மத்திய வேளாண் அதிகாரியிடம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலர் சாமுவேல் பிரவீன் குமாரை டெல்லி யில் சந்தித்து வேளாண் துறை மூலமாக செயல் படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விவாதித்தார்.

புதுச்சேரி:

புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலர் சாமுவேல் பிரவீன் குமாரை டெல்லியில் சந்தித்து வேளாண் துறை மூலமாக செயல் படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விவாதித்தார்.

செப்டம்பர் மாதத்தோடு முடிவதாக மத்திய அரசு அறிவித்திருந்த ஆத்மா திட்டத்தினை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசாங் கத்திற்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த சந்திப்பின்போதும் அதனை மீண்டும் வலியுறுத்தினார்.

வேளாண் துறை இணை செயலர் மத்திய அரசாங்கமானது ஆத்மா திட்டத்தை தொடர முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வருடம் ஆத்மா திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்குமாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார். அதற்கு வேளாண் இணை செயலர் கூடுதல் நிதி வழங்க ஆவண செய்யப்படும் என்று உறுதி கூறினார்.

இந்த சந்திப்பின்போது புதுவை அரசாங்கத்தின் வேளாண் செயலர் ரவி பிரகாஷ் வேளாண் அமைச்சரின் தனி செயலர் மனோகரன் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News