- அரசு நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் நோய் பரவும் திட்டம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாதம் இன்று மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.
- எம்.எல்.ஏ. ரிச்சர்ட் தலைமை தாங்கி மலேரியா எதிர்ப்பு மாத நிகழ்ச்சி மற்றும் கொசு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் நோய் பரவும் திட்டம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாதம் இன்று மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொகுதி
எம்.எல்.ஏ. ரிச்சர்ட் தலைமை தாங்கி மலேரியா எதிர்ப்பு மாத நிகழ்ச்சி மற்றும் கொசு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். குயவர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வினி மலேரியா நோய் பற்றியும் அதன் தடுப்புமுறை மற்றும் சிகிச்சை பற்றியும் விவரித்தார்.
தேசிய நோய் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம் சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மாணவிகள் காட்சி அமைப்பினை கண்டு களித்த னர். சுகாதார ஆய்வாளர் யசோதா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை சுகாதார உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், சுதாகர், விசாலாட்சி, மற்றும் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர்.