மணக்குள விநாயகர் கல்லூரிகளின் ஆண்டுவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.
மணக்குள விநாயகர் கல்லூரிகளின் ஆண்டுவிழா
- மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலை அறிவியல், வேளாண்மை , பிசியோதெரபி மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கான ஆண்டு விழா நடந்தது.
- சிறந்த தொழில்முனைவோராகவும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிடவும் வாழ்த்தினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலை அறிவியல், வேளாண்மை , பிசியோதெரபி மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கான ஆண்டு விழா நடந்தது.
விழாவுக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாரன்,
செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.
கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி தனது ஆண்டு அறிக்கையில், கல்லூரியின் கட்டமைப்பு, சர்வதேச சான்றிதழ் படிப்புகள், முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்லூரியின் அனைத்து சிறப்பு அம்சங்களையும் எடுத்துக்கூறினார்.
மேலாண் இயக்குனர் தனசேகரன் பேசும்போது, மாணவர்கள் தனித்திறமையுடனும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்களாகவும், எதிர் காலத்தில் சிறந்த தொழில்முனைவோராகவும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிடவும் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் மலர்கண், பதிவாளர் அப்பாஸ் மொதீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம், டீன்கள் கைலாசம், மனோகரன், முத்துலட்சுமி, கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.