புதுச்சேரி

ெடல்லியில், மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வாலிடம், அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு அளித்த காட்சி.

புதுச்சேரியில் ஐகோர்ட் கிளை அமைக்க வேண்டும்

Published On 2023-09-08 05:31 GMT   |   Update On 2023-09-08 05:31 GMT
  • மத்திய மந்திரியிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு
  • வக்கீல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஐகோர்ட் கிளையை அமைப்பதன் மூலமாக வக்கீல்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

புதுச்சேரி:

புதுச்சேரி பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு டெல்லியில் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மேக் வாலை, சந்தித்து பேசினார்.

அப்போது, சென்னை ஐகோர்ட் கிளையை புதுச்சேரியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்தார். ஐகோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்றால் சென்னை செல்ல வேண்டியுள்ளது. இதனால், வழக்காளிகளுக்கு செலவுகள் அதிகமாவதுடன், நேர விரயமும் ஏற்படுவதை மத்திய மந்தியிடம் விளக்கினார். மேலும் புதுச்சேரியில் வக்கீல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஐகோர்ட் கிளையை அமைப்பதன் மூலமாக வக்கீல்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

அதோடு பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியில் மாவட்ட நீதிமன்றத்துடன், ஐகோர்ட் செயல்பட்டதையும், இதனால், அப்போது புதுச்சேரி மக்கள் பயனடைந்ததையும் சுட்டிக் காட்டினார்.

இதனை ஏற்று கொண்ட மத்திய சட்டத்துறை மந்திரி ஐகோர்ட் கிளையை புதுச்சேரியில் அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News