கூட்டத்தில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரங்கசாமி பேசிய போது எடுத்த படம்.
அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
- புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன், தனசேகரன், ஜான்சன் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரங்கசாமி தலைமை தாங்கினார்.
புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி. சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அவைத்தலைவர் சுப்ரம ணியன், இணைச்செயலாளர் லாவண்யா, மகளிர் அணி செயலாளர் காமாட்சி, துணைச்செயலாளர்கள் சிலம்பரசன், தமிழரசி, நிர்வாகிகள் ரகுபதி, ஆனந்தன், பொருளாளர் தமிழ்செல்வன், ஜெயலலிதா பேரவை செயலாளர் காண்டீபன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுதாகர், தொழிற்சங்க பேரவை செயலாளர் பிரகாஷ், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, இலக்கிய அணி பாலு, , மருத்துவர் அணி டாக்டர் எழில், மாணவர் அணி ஜெகதீஷ், வர்த்தக அணி கணேசன், தொகுதி செயலாளர்கள் செந்தில், ரத்தின வேல்,தனவேலு,செல்லா என்கிற தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன், தனசேகரன், ஜான்சன் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.