- உள்ளாட்சித்துறையில் உழவர்கரை நகராட்சியின் கண்காணிப்புப் பொறி யாளர் பக்கிரிசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
- பொறியாளர்கள் கண்ணன் , சின்ன கண்ணன், அருளரசன் , மகேஷ் , பாலாஜி,வைத்தியநாதன், ரவிச்சந்திரன், துள சிங்கம்,உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
உள்ளாட்சித்துறையில் உழவர்கரை நகராட்சியின் கண்காணிப்புப் பொறி யாளர் பக்கிரிசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
மோதிலால்நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1985-ம் ஆண்டுக் கட்டிடவியல் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். உதவிப்பொறியாளர்கள் கெஜலட்சுமி , விக்டோரியா, சரசு, பிரமகுமாரி, சித்ரா முன்னிலை வகித்தனர்.
பொறியாளர்கள் கண்ணன் , சின்ன கண்ணன், அருளரசன் , மகேஷ் , பாலாஜி,வைத்தியநாதன், ரவிச்சந்திரன், துள சிங்கம்,உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். என்ஜினீயர் சிதம்பரநாதன் சிறப்புரை வழங்கினார். என்ஜினீயர் தேவதாசு நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் 1985-ம் ஆண்டு கட்டிடவியல் மாணவர்கள் ராம்மூர்த்தி, கஜேந்திரன், விஜயகுமார், சிவகுரு, குமாரராஜா, ரமேஷ், துரை, கலைவாணி கீதா, சுசிலா, மாலா, வள்ளியம்மை, அமுதா, இளநிலைக்கணக்கு அதிகாரி சாய்நாதன், சமூக செயற்பாட்டாளர் சக்திவேல், வக்கீல் லோக கணேஷ், என்ஜினீயர் ஞான சேகரன் உட்பட கலந்துகொண்டனர்.
முடிவில் பணிநிறைவுபெறும் பக்கிரிசாமி ஏற்புரை வழங்கினார். என்ஜினீயர் மாலைமணி நன்றி கூறினார்.